தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று ஆலோசனை :
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் 3ம் அலை தாக்கம் தொடங்கி விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில், மாநிலத்தில் இரவு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது. இது போக, வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேற்று அமல் படுத்தப்பட்டது.
இந்த நாளில் மக்கள் 100% முழு ஒத்துழைப்பு அளித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது தெரிவித்தார். இந்த நிலையில், இன்னும் தொற்று பரவல் குறையாததால், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்துவது, குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்