தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா?? – நாளை அவசர ஆலோசனை!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை ஆலோசனை கூட்டம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. அதனால் தினசரி பாதிப்பு பத்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்தப் பெருந்தொற்றை தடுக்க, அரசு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நாளை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் அரசு சார்பில் வெளியிடப் படவில்லை. இதனால் பொதுமக்கள் ஊரடங்கு குறித்த பதற்றத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here