தமிழகத்தில் தளர்த்தப்படுகிறதா ஊரடங்கு கட்டுப்பாடுகள்?? முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!!

0

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

நாளை கூட்டம் :

தமிழகத்தில் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் 27ம் தேதியான நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.

இதனால், வருகிற ஜனவரி 30ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்குமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. நாளை நடைபெறும் இந்த கூட்டத்தை அடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறதா? அல்லது தளர்த்தப்படுகிறதா? என்ற முடிவுகள் தெரிய வரும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here