தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்த, ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆத்தாடி எவளோ பெருசா இருக்கு.., பிகினி உடையில் உட்கார்ந்து காட்டும் கிரண்!!
முக்கிய அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வந்தது. இதனால், முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். அரசின் தொடர் முயற்சியால் வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில், விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், பிற நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் வரும் பொழுது மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். தொற்று பரவல் குறைந்தாலும் பொதுமக்கள் கட்டாயம், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்தார். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்