தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது அல்லது விளக்கிக்கொள்வது குறித்து மருத்துவ குழுவுடனும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடனும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் உயிரிழப்புகளும் கணிசமான அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற 3 ஆலோசனைகளில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் 2 மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் பூட்டப்பட்டு உள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பது குறித்து மத்திய அரசு பரிந்துரை வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |