ஆகஸ்ட் 5 முதல் சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பம் – அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

1

தமிழகத்தில் மாணவர்கள் சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

சட்டப்படிப்புகள் விண்ணப்பம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வருட கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அம்பேத்கர் பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் ஐந்தாண்டு சட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் www.tndalu.ac.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து பதிவு செய்யலாம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

Ambedkar university
Ambedkar university

கொரோனாவால் அடித்த ஜாக்பாட் – 33 ஆண்டுகள் கழித்து 10ம் வகுப்பில் பாஸ் ஆன 51 வயது நபர்!!

ஆகஸ்ட் 10ம் தேதி முதல் நேரடியாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களை செப்டம்பர் 4ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்டப்படிப்புகள் குறித்த விண்ணப்ப அறிவிப்புகள் இணையத்தளத்தில் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here