நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அதில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது பலரையும் வேதனையாக்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நாடெங்கிலும் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. நமக்கு தெரிந்து நிர்பயா வழக்கில் தொடங்கி சிறு குழந்தைகள் வரை இந்த கொடுமையை அனுபவித்து வருகின்றனர். போக்ஸோ சட்டம் மூலம் பலரும் தண்டிக்கப்பட்டு தான் வருகின்றனர். ஆனாலும் இந்த பாலியல் வன்கொடுமை தடுத்து நிறுத்தியபாடில்லை.
தற்போது அதற்கும் மேலே சென்று குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர். ஆனாலும் நடக்காமல் இருக்க வேண்டிய எந்த வேலையையும் யாரும் பார்ப்பதில்லை என்று குழந்தை நல ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நன்கு தெரிந்தவர்களால் தான் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
எழில் கொஞ்சும் அழகில் “பிக் பாஸ்” லாஸ்லியா – வைரலாகும் புகைப்படம்!!
சில நாட்களுக்கு முன் வெளியான டிக்டாக் பிரபலம் பார்கவ் 14 வயது குழந்தையை கற்பழித்து கற்பமாக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் தான் பாலியல் வன்கொடுமையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்த காலத்தில் இணைய ரீதியாக தான் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடக்கிறது என்றும் கூறியுள்ளார் குழந்தைகள் நல ஆர்வலர். மேலும் பெற்றோர்கள் குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.