தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளை திறந்து வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் சில கல்லூரிகள் பிற ஆண்டு மாணவர்களையும் கல்லூரிக்கு நேரில் வர நிர்பந்திப்பதாக புகார்கள் வந்த நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
உயர்கல்வித்துறை எச்சரிக்கை:
கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. ஒவ்வொரு முறை பொதுமுடக்கம் நீடிக்கப்படும் பொழுதும் அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைவு மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்கி நீண்ட நாட்கள் கடந்து விட்டதால் கல்லூரிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களும் கல்லூரிகளுக்கு உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். மேலும் டிசம்பர் 7ம் தேதி முதல் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்கலாம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்களையும் நேரில் வர நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியானது.
வரலாற்றில் இன்று – ‘இரும்பு பெண்மணி’ ஜெயலலிதா நினைவு தினம்!!
இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ள உயர்கல்வித்துறை, அரசின் உத்தரவினை மீறி இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்க கூடாது. இதனை மீறினால் அந்த கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.