கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், குறிப்பாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று (மே 31) கனமழை பெய்ய அதிகபட்ச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனே இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.