தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நடைபெற்று வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த வருடம் நடைபெற வேண்டிய நீட் மற்றும் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு..!
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமான ஒன்றாக உள்ளது. இதனால் அரசு சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த முறை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால், நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.