தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு நடைபெற வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பரவி வந்த வதந்திகளுக்கு அமைச்சர் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்களை கட் அவுட் ஆக வைத்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. சமூக இடைவெளி போன்ற ஊரடங்கு உத்தரவு விதிகளை மதிக்காமல் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட சில தனியார் பள்ளிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் தற்போதைக்கு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வாய்ப்பில்லை என தெரிவித்து உள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்களை விளம்பர பலகையாக வைக்கக்கூடாது என எச்சரித்து உள்ளார். மீறி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.