முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது பொங்கல் பரிசு 2021 குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அரிசி அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.2500 மற்றும் முழு கரும்பு பொங்கல் பரிசுடன் வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் தரப்பு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்ட எடப்பாடியில் நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்த 2021 ஆம் ஆண்டு வரும் பொங்கல் விழாவில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 4ம் தேதி முதல் 2500 ரூபாய் வழங்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் ஒரு கிலோ அரிசி, முழு கரும்பு, உலர்ந்த திராட்சை, முந்திரி போன்றவற்றை அளிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த கனமழை!!
கடந்த பொங்கல் தினத்தில் துண்டு கரும்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா பரவி இருக்கும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இதனை முதலமைச்சர் சிறப்பு சலுகையாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கின் போது கூட அனைவர்க்கும் 1000 ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.