தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி?? வெளியான தகவல்!!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி?? வெளியான தகவல்!!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி?? வெளியான தகவல்!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வந்ததால் தமிழக அரசு ஊழியர்களும் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். ஆனாலும் மத்திய அரசுக்கு நிகராக ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய அணியை 3 பிரிவாக பிரித்த பிசிசிஐ…, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல போட்ட பலே பிளான்!!

இதன் உச்சபட்சமாக ஜூலை 14ம் தேதி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்து உள்ளனர். மேலும் அரசு பள்ளியை போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம், நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர். இதனை அரசு பரிசீலிக்கும் பட்சத்தில் ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வரும் என பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here