தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?? வலுக்கும் போராட்டம்!!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?? வலுக்கும் போராட்டம்!!!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?? வலுக்கும் போராட்டம்!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதமாக ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. எனினும் மத்திய அரசு அறிவித்த ஜனவரி மாதம் முதலே அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐயையோ காவியா.., விலகி இருக்குறது கூட தெரியமா இப்டி பண்றீங்களே.., திண்டாடும் இளசுகள்!!

அந்த வகையில் மத்திய அரசுக்கு நிகரான தேதியில் அகவிலைப்படி உயர்வு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டகத்தில் உள்ள பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (மே 26) ஈரோட்டில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here