கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள் கொண்டு வர தமிழக அரசு தடை!!

0

கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வாத்துகள், கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் மாவட்ட எல்லைகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பறவை காய்ச்சல்:

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஜனவரி 4ம் தேதி பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனால் அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வளர்ப்பு வாத்துகள், கோழிகள் என அனைத்து பறவைகளையும் அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கேரளாவில் இருந்து வாத்து, கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு வர தடை விதித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து தற்போது தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டின் அண்டைய மாநிலங்களான கர்நாடாகா மற்றும் கேரளா மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்பட்ட போதெல்லாம் தமிழக அரசின் துரித நடவடிக்கை மற்றும் ஏற்கனவே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் தீவிர நோய்கண்காணிப்பு நடவடிக்கைகளால் இதுவரை தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய்க்கிளர்ச்சி ஏற்படவில்லை.

அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும்!!

கேரள மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள 26 தற்காலிக சோதனைச் சாவடிகள் அனைத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு குழுக்கள் மூலம் கேரளாவிலிருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள் மற்றும் அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் நுழையா வண்ணம் தடை செய்து திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் நுழையும் மற்ற அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கு நோய் வராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோழிப் பண்ணைகளை தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் கேரளாவிலிருந்து கோழிகள்/ குஞ்சுகள் விற்பனைக்கு வராமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கேதர் ஜாதவை கழட்டி விட சிஎஸ்கே திட்டம்!!

எந்த சூழ்நிலையினையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கொண்ட மொத்தம் 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்குத் தேவையான சுயபாதுகாப்பு உபகரணங்கள் தேவையான அளவில் இருப்பு உள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தேசிய முட்டை உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல், தலைவர், கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், நாமக்கல் மற்றும் செயலர், பல்லடம், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரிடம் கேரள மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கோழிக்குஞ்சுகள், முட்டைகள் மற்றும் தீவனம் போன்ற பொருட்களை பெறுவதாக இருந்தால் உரிய அரசு அலுவலர்களிடமிருந்து முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர உயிரி பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றிட கோழிப்பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோழிகளில் பெரிய அளவில் சந்தேகத்திற்குரிய திடீர் இறப்புகள் ஏதேனும் ஏற்படின் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் விவரம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

நன்கு சமைத்த கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பதால் பறவைக்காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு பரவாது. மேலும், இப்பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே, இந்நோய் குறித்து பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ள தேவையில்லை. கேரள மாநிலித்திலிருந்து தமிழகத்திற்குள் பறவைக்காய்ச்சல் பரவாத வண்ணம் அரசால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here