தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் – போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்பு? அரசு பகிரங்க எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் வருகிற மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில். அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

பகிரங்க எச்சரிக்கை:

இந்தியாவில் வங்கி ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது மற்றும் எல் ஐ சி ஊழியர்கள் போன்று வாரத்தில் 5 நாள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதே நாளில், தமிழகத்திலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள, ஒரு சில தொழிற்சங்கங்கள் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, மதுரை போக்குவரத்து கழகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு பஸ் ஊழியர்கள் இந்தப் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பஸ் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here