தமிழகத்தில் ஜனவரி 16ல் இருந்து பொது முடக்கம்?? – அதிகரிக்கும் தொற்றால் தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்!!

0
மாநிலத்தில் வேகமெடுக்கும் புது காய்ச்சல் - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அரசு!அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
மாநிலத்தில் வேகமெடுக்கும் புது காய்ச்சல் - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அரசு!அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் கூடுதல் கட்டுப்பாடுகளை அடுத்து, ஜனவரி 16ம் தேதிக்கு பிறகு மீண்டும் பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது.

அமலாகுமா பொதுமுடக்கம்??

தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை வைரஸ் பரவலை அடுத்து, கடந்த சில நாட்களாக தான் இயல்பு நிலை திரும்பி வந்தது. ஆனால், மக்களுக்கு பேரிடியாக ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளதாக செய்திகள் வலம் வர ஆரம்பித்தது. மேலும், கொரோனாவின் 3ம் அலை பரவலும் தீவிரம் காட்ட தொடங்கியது. இந்த நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டுள்ள இரவு நேர பொதுமுடக்கம் இன்று அமலுக்கு வருகிறது. மேலும், இந்த பொங்கல் பண்டிகை முடிந்த பின் அதாவது, ஜனவரி 16ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அரசு சார்பில் விவாதம் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியவில்லை. இதனால், மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here