தமிழ்நாட்டில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ஏ/சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்தி வருவதால் மின் தேவை முன்பில்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இதனால் அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் பெற வீடுகள், தொழில் நிறுவனங்களில் குறைந்த விலையில் சோலார் தகடுகள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தினசரி மின் தேவை குறைந்து வருவதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் 14,000 மெகாவாட் மின் தேவை இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட் ஆக குறைந்துள்ளது. இதனால் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சைவத்திற்கு பதிலாக அசைவ உணவை அனுப்பிய உணவகம்., ரூ 42,000 அபராதம்., அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை!!