பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு இனி ஆன்லைனில் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2016 முதல் நடைமுறை:
வீடுகளுக்கு பொதுமக்கள் மின்சார இணைப்பு பெற நேரடியாக விண்ணப்பிப்பது மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது என இரு முறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் 2016 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது வாரியம்.
இதன்படி மின் இணைப்பு பெற விரும்புவோர் மார்ச் 1 முதல் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |