தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை விட்டு விட்டு பெய்து வருவதாக கூறப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக இன்று (நவம்பர் 15) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.