தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த வாரம் நடைபெற இருந்த சனிக்கிழமை தடுப்பூசி முகாம் இந்த வாரம் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு :
தமிழகத்தில் டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொடர் பரவலை தடுக்க அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. இந்த வகையில் வாரந்தோறும், தமிழக அரசால் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த வாரம், சனிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த வாரம் மட்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடர்ந்து செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதால், நானும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் நம் மாநிலம் முன்னோடியாக திகழ்வதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்