தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு தலா 50,000 நிவாரணம் – அரசு திட்டவட்டம்!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கு 50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 அரசு உறுதி:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெல்டா வைரஸ் மற்றும் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று, தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த, அரசு முன்கூட்டியே ஊரடங்கு அறிவித்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். வைரஸ் பரவல் சற்று குறைந்ததாலும், தடுப்பூசி செலுத்தப்படுவதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதாலும் அரசு விதித்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொற்றால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 38,000 குடும்பங்களுக்கு, 50 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், தகுதி வாய்ந்தவர் அனைவருக்கும் இழப்பீடு வழங்க தொடர்ந்து அரசு முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here