தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,760
- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 81 (0.70%)
- இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை – 3,37,841
- இன்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் – 11,121
- அங்கீகரிக்கப்பட்ட கொரோனா ஆய்வகங்கள் எண்ணிக்கை – 61
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,406 (37.50%) ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 7,270 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த 172 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டு மக்கள் அஞ்சவேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட 11,760 பேரில் பேர் 7,647 ஆண்கள் எனவும், 4,110 பேர் பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |