தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா உறுதி – ஊரடங்கு நீட்டிப்பது குறித்து விளக்கம்..!

0

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1000ஐ நெருங்கி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 969 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஈரோட்டில் ஒருவர் கொரோனா வைரஸ் தாகத்திற்கு உயிர் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரஸால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்து தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்து அறிவிக்கும் முடிவை தமிழக அரசு பின்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் வந்து சேரவில்லை எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here