தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை – நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!

0
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை - நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா 4ம் அலை - நிபுணர் குழு அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கம்!!

கொரோனா வைரஸின் 4ம் அலை பரவல், ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சம் தொடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொரோனா 4ம் அலை:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் 3ம் அலை பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசின் தீவிர முயற்சிகளால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக சீனா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால், இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்குமோ? என அஞ்சப்படுகிறது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில்,  கொரோனா வைரஸ் 4ம் அலை பரவல் , வருகிற ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நோயின் தாக்கம் வீரியமாக இருக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here