தமிழகத்தில் மீண்டும் 7 பேருக்கு தொற்று உறுதி – மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் அதிர்ச்சி தகவல்!!

0

தமிழகத்தில் 7 நபர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொற்று உறுதி :

உலகம் முழுவதும் பரவி வரும் ஓமைக்ரான் தொற்று,எல்லா மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வரும் இந்த நோய்,முதன் முதலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு டாக்டருக்கு பரவியது. தமிழகத்திற்கு இதுவரை பாதிப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. தற்போது நைஜீரியாவில் இருந்து வந்த  ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் ஒருவருக்கு,ஓமைக்ரான் பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு அவரது மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு, நேற்று ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருடன் தொடர்பில் இருந்த மீதமுள்ள 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும்,தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here