தமிழகத்தில் ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா உறுதி – குறையும் பலி எண்ணிக்கை!!

0

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 53 பேர் பலியாகி உள்ளதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4,53,165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 46,912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,49,583 ஆக உயர்ந்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

corona activities in TN
corona activities in TN

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரசி மற்றும் ரொக்க பணம் – மாநில அரசு முடிவு!!

ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வாறு வந்தவர்களில் இதுவரை 6,500 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 922 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 894 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4684 ஆகியோர் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here