தமிழகத்தில் அமலாகும் கூடுதல் கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர கூட்டம்!!

0

தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அவசர கூட்டம் தற்போது நடைபெற உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமலாகிறதா கட்டுப்பாடுகள்:

உலகம் முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியாவில் காட்டுத்தீயாய் இந்த வைரஸ் பரவல் இருந்து வருகிறது. இந்த தொற்று பரவலில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் வைரசால் 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில மணி நேரங்களில் மருத்துவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதனால், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here