பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் – குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி!!

0
தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட் - ரேஷன் பொருட்கள் பெற புதிய விதிகள் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 4 ல் தொடங்கி வைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொங்கல் சிறப்பு தொகுப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பொருட்களுடன் கூடிய மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு பை வழங்கப்படும் என கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. 505 கோடி செலவில் வழங்கப்படும் இந்தத் திட்டத்தால், 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 ரேஷன் கார்டுதாரர்கள் பயன் பெறுவர் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுடன் சேர்த்து, கடுகு, சீரகம், பருப்பு வகைகள், புளி, மிளகு, நெய் உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இது தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 4 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here