சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிப்பு இல்லை என தெரிவித்தார்.
தவறான தகவல்கள்..!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று குடியுரிமை சட்டத் திருத்தத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, சிஏஏ குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. எதிர்கட்சிகள் அரசின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்குடன் செயல்படுகின்றன.
மேலும் குடியுரிமை சட்டத் திருத்தம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் (சிறுபான்மையினருக்கும்) பாதிப்பு நிகழாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வண்ணாரப்பேட்டை கலவரத்தின் பின்னணியில் பல விஷமிகளின் பங்கு உள்ளது எனவும் கூறினார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |