தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்ட நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பு நடவடிக்கைககள் அதிகரிக்கப்பட்டு உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மேலும் நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ குழுவுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |