தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைந்த அளவே பெய்திருந்தாலும், இடையிடையே வந்த புயல்கள் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். கனமழை, புயல், வெள்ளப்பெருக்கு என அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வானிலை அறிக்கை:

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் & குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“பாஸ்டேக் முதல் லேண்ட்லைனில் ‘0’ வரை” – ஜன.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் தலா 1 செமீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

டிசம்பர் 20, 21ம் தேதிகளில் குமரிக்கடல் மற்றும் டிசம்பர் 22ம் தேதி மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here