தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு!!

0

தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்திற்காக 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாதிவாரியாக கணக்கெடுப்பு:

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களின் மொத்த எண்ணிக்கையை கணக்கு செய்வதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகின்றது. இந்த கணக்கெடுப்பின் உதவியோடு தான் மக்களுக்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதே போல் நாட்டின் வளர்ச்சி போன்றவையும் கணக்கிடப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மக்களின் சாதிவாரியான விவரங்களை அறிய முடியும். அதே போல் இதன் மூலமாக தான் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க முடியும். கடந்த 2011 ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றது. இதனை அடுத்து மீண்டும் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த அரசு தற்போது ஆணையம் ஒன்றினை அமைக்க உள்ளது.

தமிழக மக்களுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு!!

இந்த ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதியான குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு குறித்த விவரங்களை அரசிடம் 6 மாதங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஆணையத்திற்காக தமிழக அரசு 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here