சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார்.
சட்டப்பேரவை கூட்டம்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு செய்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு சட்டப்பேரவை கூட்டம் நடத்த தலைமை செயலகத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த அரங்கத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இது தான். நாளை நடைபெறும் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். இப்படியாக இருக்க வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தி.மு.க சார்பில் இருபதிற்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி நேரத்தில் பேசவுள்ளனர். இதன் மூலமாக வரும் நாட்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சி போராட்டம்:
இன்று நடைபெற இருந்த கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி தி.மு.க எம்எல்ஏ.,க்கள் நீட் தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!
‘BAN NEET’ என்கிற வாசகங்களுடன் கூடிய முகக்கவசங்களை அணிந்து வந்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.
இன்றைய கூட்டம்:
இன்று முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. முதல் நாளான இன்று கொரோனா நோய் பரவல் காரணமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மற்றும் மறைந்த 23 எம்எல்ஏகளுக்கும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.