
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவடைந்து, வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஆதிதிராவிட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.3 கோடி வரை கல்வி உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஆதி திராவிடா் நலத்துறை உதவி இயக்குனர், “இத்திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மாணவர்களிடம் உரிய ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பெற்று, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு முகாம் கூட ஏற்படுத்தலாம்.” என கூறியுள்ளார்.