தமிழக காவல்துறையில் நடந்த முக்கிய மாற்றம் – உள்துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை!!

0
தமிழக காவல்துறையில் நடந்த முக்கிய மாற்றம் - உள்துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை!!
தமிழக காவல்துறையில் நடந்த முக்கிய மாற்றம் - உள்துறை செயலாளர் அதிரடி நடவடிக்கை!!

தமிழகத்தில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்க காவல்துறை தலைமை அலுவலகத்துக்கு தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறை

அதிகாரிகள் ஓய்வு மற்றும் சில காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பவும், சட்ட ஒழுங்கை நிலை நிறுத்தவும் தமிழக அரசு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளது.

  • சென்னையில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய P.தாமரைக்கண்ணன் ஓய்வு பெறுவதால், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி-யாக திரு.கே.சங்கர் ஐ.பி.எஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • தலைமையிட ஏடிஜிபி-யாக பணியாற்றிய G.வெங்கட்ராமனுக்கு கூடுதலாக நிர்வாக பிரிவையும் வழங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • கமாண்டோ படை பிரிவில் ஏடிஜிபி-யாக பணியாற்றிய H.M.ஜெயராம் கூடுதலாக ஆயுதப்படையையும் நிர்வகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தலைமை காவல்துறை டிஜிபி-யாக பணியாற்றிய C.சைலேந்திர பாபு க்கு கூடுதலாக காவலர் பயிற்சி அகாடமி யையும் சேர்த்து கவனிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
  • தூத்துக்குடியில் ஏ.எஸ்.பி.-யாக பணியாற்றிய G.சந்தீஸ், கோவை சட்ட ஒழுங்கு டி.சி.பி.-யாக பதவி உயர்வு வழங்கட்டுள்ளது.
  • கோவை சட்ட ஒழுங்கு டி.சி.பி.-யாக இருந்த N.மதிவாணன், கோவை போக்குவரத்து டி.சி.பி.-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  • கோவை போக்குவரத்து டி.சி.பி.-யாக பணியாற்றிய D.அசோக் குமார், சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி.-யாக மாற்றப்பட்டார்.
  • நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.-யாக இருந்த S.செல்வக்குமார், சென்னை கமாண்டோ படை எஸ்.பி.-யாக மாற்றப்பட்டார்.
  • சென்னை கமாண்டோ படை எஸ்.பி.-யாக இருந்த G.ராமர், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.-யாக மாற்றம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here