தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் பொது விடுமுறை – அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் அலுவலர்கள்!!

0

தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ம் தேதி தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் தொடர் விடுமுறை அளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை :

தமிழகத்தில்  ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஞாயிறு கிழமை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்த நிலையில், வருகிற ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி,  ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும்  தொடர் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில், ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், ஜனவரி 18ம் தேதி தைப்பூச விழா பொது விடுமுறை என்பதாலும், இடைப்பட்ட நாளான ஜனவரி 17-ஆம் தேதியை விடுமுறை தினமாக அறிவித்து தொடர்ந்து 4 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 17ம் தேதி விடுமுறையை ஈடு கட்டும் பொருட்டு ஜனவரி 29 ம் தேதி சனிக்கிழமையை பொது வேலை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here