சில நாட்களாகவே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தீபாவளி அன்றைக்கு கூட மழையுடன் தான் பொழுதை கழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இன்று தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
என்னோட அடுத்த டார்கெட் இந்தியா தான்.., எலான் மஸ்க் வெளியிட்ட முக்கிய தகவல்!!
அதாவது, செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், தேனி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியுள்ளனர்.
மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.