10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் இந்த ஆண்டு புதிதாக, சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி அவசியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கையில் பச்சிளம் குழந்தையுடன் பாரதி கண்ணம்மா அருண் – சீரியலில் புது ட்ராக்கா?? குழப்பத்தில் ரசிகர்கள்!!
கல்வித்துறை அறிவிப்பு :
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். அதன்படி தற்போது, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அமைச்சர் நேற்று அறிவித்தார். அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதியும், 11ஆம் வகுப்பு பொது தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இந்த ஆண்டு புதிதாக தொழிற்கல்வி என்ற ஒரு பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திற்கும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பாடப் பிரிவில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி மற்றும் பெற்றால் போதும் என்றும், இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசின், இந்த விளக்கத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்