நடிகர் விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் இறக்குமதி வரி வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்து தம்மை வருத்தப்பட வைத்துள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.
வருத்தமடைந்த விஜய்:
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், வரி செலுத்துவது என்பது முக்கியம், நீங்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருங்கள் என்று நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் விஜய் தரப்பில் இந்த காருக்கான இறக்குமதி வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் விஜய்யை புண்படுத்தியதாகவும், என்னை தேச துரோகி போல் விமர்சித்தது வருத்தம் அளிப்பதாக விஜய் கூறியதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் விஜய் தன்னை விமர்சித்தது குறிப்பான தகவல்களை நீக்குமாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்