தனது மனைவியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு தான் பொறுப்பல்ல என பிரபல சீரியல் நாயகன் ஈஸ்வர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கருப்பு வலையில் சிக்கிய பளிங்கு மேனி.., ராசி கன்னாவின் புகைப்படத்தை பார்த்து கவி பாடும் இளசுகள்!!
புகார் அளித்த நடிகர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஈஸ்வர். இவரது மனைவி ஜெய் ஸ்ரீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனது கணவருக்கு மகாலட்சுமி என்ற சீரியல் நாயகியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ஜெயஸ்ரீ ராகவேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இந்த காதல் ராகவேஷ் தந்தைக்கு பிடிக்காமல் போனதால், ஜெயஸ்ரீயை கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாராம். இதைக் கேள்விப்பட்ட ஈஸ்வர், தனது மனைவியின் உயிர் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்ற முன்னெச்சரிக்கை புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்