ஸ்டாலினுக்கு நினைவு பரிசளித்த அன்பில் மகேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நண்பரான அன்பில் மகேஷ் ஒரு புகைப்படத்தை அவருக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

நினைவுப்பரிசு வழங்கி உதயநிதி:

சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களைக் கைப்பற்றியது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றுள்ளார் மு.க ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று எம்எல்ஏ வாக பதவியேற்றுள்ளார்.

அதை தொடர்ந்து உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் சென்னையில் உள்ள திருவெறும்பூர் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவியை கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது நண்பர் உதயநிதி ஸ்டாலினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்தார். அவரை சந்தித்த அன்பில் மகேஷ் பெரிய புகைப்படம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கினார். உதயநிதி ஸ்டாலின் அதனை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here