தமிழ் திரையுலகில் வில்லத்தனத்தில் புதிய யுக்தியை உண்டாக்கிய நடிகர் ரகுவரனின் மகன் தற்போது பட வாய்ப்புகளுக்காக இயக்குனரை நாடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
வில்லன் மகன்:
தமிழ் திரையுலகில் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். இதனை அடுத்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் தனுசுடன் இவர் நடித்த யாரடி நீ மோகினி திரைப்படம் தான் இவருக்கு இறுதி படமாக அமைந்தது. முதல்வன் படத்தில் நடித்ததற்காக இவர் சிறந்த நடிகர் என்ற தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
இவருக்கு நடிப்பின் மீது இருந்த அதே பிரியம் இசையின் மீதும் இருந்துள்ளது. இவர் ஜெயசித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். தனது தாயை பிரிந்து வாழ்ந்து வரும், இவர் தற்போது படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார். இதற்காக, பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் ரகுவரன் அவர்களின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்