தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..., வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸுக்கு மேலாக அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில், மக்களை மகிழ்விக்க அடுத்த 5 நாட்களுக்கான வானிலை நிலவரம் உள்ளதாக ஆய்வு மையத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்றும் (மே 18), நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும். இதனை தொடர்ந்து, மே 20 முதல் 22ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4.., இந்த வார எலிமினேஷனில் வெளியேறுவது இவரா? வைரலாகும் தகவல்!!!

இதே வேளையில், மே 18 (இன்று) முதல் மே 20ம் தேதி வரை தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரில் வெப்ப நிலையானது இயல்பை விட 3 முதல் 4 % வரை அதிகரிக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். இருப்பினும், வெப்ப நிலையானது 28 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here