மகாராஷ்டிரா முதல் தென்தமிழகம் கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று(ஏப்ரல் 23) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
24.04.2021 மற்றும் 25.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 26.04.2021 மற்றும் 27.04.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடியே லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.
ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்ப ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலையானது 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்ப ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெட்பநிலையாகவே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஏலகிரி 3, தளி, சோலையார், புதுச்சத்திரம் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.