தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் குறித்த முழு தகவலையும் வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தென் தமிழகம் மற்றும் டெல்ட்டா மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று காலையிலும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் டெல்ட்டா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்யக்கூடும்.
என்னது 100வது வெற்றியா?? வேற லெவல் போங்க! கொல்கத்தா அணியை பாராட்டி ஷாருகான் ட்வீட்!!
சில டெல்ட்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாகவே சில இடங்களில் மழை பதிவாகி வருகிறது. மேலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.