தமிழகத்தில் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற மே மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தற்காலிக சபாநாயகர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர்:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைபிடித்தது. அதன்படி தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று(மே 7) பதவி ஏற்றார். மேலும் அவரை தொடர்ந்து அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர். இந்த கூட்டம் வருகிற மே மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் பேரவையின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் 11ம் தேதி சட்டபேரவையில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கவுள்ளனர்.
முழு ஊரடங்கு எதிரொலி – திண்டுக்கல்லில் காற்றில் பறக்கவிடப்பட்ட சமூக இடைவெளி!!
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தற்காலிகமாக புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு மே 11ம் தேதி இவரே பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.