தமிழக பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு – இன்று மாலை வெளியீடு!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக தற்போது பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு இன்று மாலை ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள்:

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ஏற்கனவே 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது. மேலும் அவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்ததால் அவர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் தேதி முதல் தொடங்கப்படும் பொதுத்தேர்வினை தேதி கூறாமல் தமிழக அரசு ஒத்திவைத்து. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் செய்முறை தேர்வுகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மே 2க்கு பின் ஊரடங்கு இருக்காது – ஸ்டாலின் நம்பிக்கை!!

இந்நிலையில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு இன்று மாலை செய்முறை தேர்வுகள் முடிவுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் தமிழகத்தில் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதுகுறித்து முதன்மை கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்துகிறார். எனவே இன்று மாலை இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here