ஏலத்தில் டிமாண்டை ஏற்படுத்திய தமிழக வீரர் – அசத்துவாரா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
sharukh khan

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை துவங்க இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக் கான். இவர் இன்றைய போட்டியில் அசத்துவாரா?? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.

ஷாருக் கான்:

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது. இரு அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் பலர் உள்ளார்கள். எனவே இன்றைய போட்டியில் பெரிய அளவிலான ஸ்கோரை அனைவரும் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து புதுவரவாக பஞ்சாப் அணிக்கு வந்திருக்கிறார் தமிழக வீரர் ஷாருக் கான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

pbks

இவர் சையது முஸ்தாக் அலி தொடரின் மூலம் அனைவரின் கவனத்தியும் வெகுவாக கவர்ந்தார். அந்த தொடரில் தமிழக அணி வெற்றி பெற்றதற்கு இவர் முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் இக்கட்டான கட்டத்தில் அதிரடியாக களமிறங்கி மேட்சை பினிஷ் செய்து விடுவார். தமிழகத்தின் பினிஷர் என்றால் அது ஷாருக் கான் தான். அந்த அளவிற்கு இக்கட்டான நிலையில் சிக்ஸ், போர் அடித்து அதிரடி காட்டி வருகிறார்.

sharukh khan

இப்படி அதிரடி காட்டிய ஷாருகான், பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாக கண்ணில் சிக்கினார். ஐபிஎல் மினி ஏலத்தில் ஷாருக் கானை பஞ்சாப் அணி 5.2 கோடிக்கு எடுத்தது. இவரை எடுப்பதற்கு பெங்களூரு அணி கடுமையாக போட்டி போட்டது. ஆனால் பஞ்சாப் அணி ஷாருக்கானை எடுத்தது. தற்போது இன்றைய போட்டியில் ஷாருக் கான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இவரை எதுக்கு உட்கார வச்சிருக்கீங்க, இவர் இருந்த ஜெயிச்சிருக்கலாம்! ஐதராபாத் அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

மேலும் இவர் இன்றைய போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம். தற்போது உலக கோப்பை தொடருக்கு இந்திய அணிக்காக வீரர்களை அணி நிர்வாகம் தேடி வருகிறது. அதிலும் இந்திய அணிக்கு ஓர் அதிரடியான பினிஷர் கட்டாயமாக தேவை. எனவே இன்றைய போட்டியில் ஷாருக் கான் அதிரடி காட்டினால் கட்டாயமாக இவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here