தமிழக சட்டபேரவையின் புதிய சபாநாயகர் – அப்பாவு போட்டியின்றி தேர்வு!!

0

தமிழகத்தில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபேறவுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் அதற்கான வேட்புமனு தாக்கல் முடிவுக்கு வந்தது.

புதிய சபாநாயகர்:

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்ட தொடர் இன்று கூடியது. அதில் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி விளங்கினார். மேலும் இன்று கூட்ட தொடரில் அனைத்து புதிய உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக பிச்சாண்டி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நாளை சட்டப்பேரவையின் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணி வரை அதற்கான வேட்பு மனுதாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் !!!

இந்நிலையில் சபாநாயகர் தலைவர் பதவிக்கு திமுக எம்.எல்.ஏ அப்பாவு மற்றும் துணை தலைவர் பதவிக்கு பிச்சாண்டி இவர்களை தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை இதன் காரணமாக சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் துணை சபாநாயகராக பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here